Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்செங்கோட்டில் பெண் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வுப் பேரணி

நவம்பர் 23, 2023 10:49

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் திருச்செங்கோடு மகளிர் காவல் நிலையம் சார்பாக நடைபெற்ற பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக விழிப்புணர்வுப் பேரணி  நடைபெற்றது.

இந்தப் பேரணியை திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழினி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தீபா முன்னிலை வகித்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டு பெண் குழந்தைகளைக் கல்வி கற்க வைப்போம்.

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்தனர். பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம், பாதுகாப்போம்  பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்,என்று முழக்கங்கள் எழுப்பிய படி வந்தனர். 

திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி புதிய பேருந்து நிலையம் ல்,பழைய பேருந்து நிலையம்  அண்ணா சிலை வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது.  

இந்நிகழ்ச்சியில் அனைத்து மகளிர் காவல் நிலைய துணை ஆய்வாளர் சியாமளா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

தலைப்புச்செய்திகள்